தொடுவானம்
தொடுவானம்
(அல்லயன்ஸ்)
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள் எழுதிய ஈ தரம் கதா என்ற நாவல் தொடுவானம் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அநாதையாக வளர்ந்த ரமேஷ்சந்திராவின் வாழ்க்கையில் தென்றலாய் ஹேமா நுழைகிறாள்.
முதல் பார்வையலேயே சுதாகர் ஹேமாவை மனப்பூர்வமாக நேசிக்கிறான். பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று கருதிய ரமேஷ்சந்திரா அதன் மூலமாக சமுதாயத்தில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறான்.
ஹேமாவின் உயிர்த் தோழி மாதவியின் வருகையால் ஹேமா, ரமேஷ்சந்திராவின் தாம்பத்திய வாழ்க்கையில் புயல் வீசுகிறது.
ஊகிக்க முடியாத திருப்பங்களுடன், சம்பவங்கள் நம் கண் முன்னே நிகழ்வது போன்ற பிரமையில் வாசகர்கள் ஆழ்ந்து போய் விடுவார்கள் என்றால் அது மிகை அல்ல.