சாகர சங்கமம்
சாகர சங்கமம்
(அல்லயன்ஸ்)
திரு எண்டமூரி வீரந்திரநாத் அவர்கள் தெலுங்கில் எழுதிய வென்னெல்லோ கோதாரி என்ற நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டு சாகர சங்கமம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
மிக வித்தியாசமான நடை இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. சம்பந்தபட்ட கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் ஒரே நிகழ்ச்சி பல விதமான கோணங்களில் சொல்லப் படுகிறது.
தரளா, ஆனந்த், பிருந்தா.. இவர்களுக்கு இடையில் மலரும் முக்கோணக் காதல் கதை என்றாலும், தரளா ஆனந்தைத் திருமணம் செய்துகொண்ட பிறகு ஏற்படும் திடுக்கிடும் திருப்பங்கள், பிருந்தா தன் மகனை கோபிசந்தை சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகள், கோபிசந்த் தன் தந்தையைப் பழி வாங்க போடும் திட்டங்கள்... நாவலை படிக்கப் படிக்க வாசகர்கள் கதையுடன் ஒன்றிப்போவது உறுதி.