Skip navigation.

நிவேதிதா

நிவேதிதா
யத்தனபூடி சுலோசனா ராணி
(அல்லயன்ஸ்)

200000 - Cover Page - Nivedita, Small, 2000

திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள தெலுங்கில் எழுதிய பௌளி.. பில்லலு .. ஜீவிதம் என்ற நாவல் நிவேதிதா என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது.

கதையின் நாயகி நிவேதிதா வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்கிறாள். இளமையிலேயே கணவன் விபத்தில் இறந்து போய்விட விதியுடன் போராடி குழந்தைகளை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்குகிறாள். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருகிறாள்.

இதற்கு நேர்மாறான வாழ்க்கை ஹேமாவுடையது. எல்லா வசதிகள் இருந்தும் தவறான பாதையைத் தேர்ந்து எடுத்த காரணத்தினால் அவளுடைய வாழ்க்கை சீரழிந்து போகிறது.

பெண்கள் தனித்தன்மை வளர்த்துக்கொண்டால் எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கமுடியும். சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும் முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் புதினம்.